Friday 25 May 2012

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய்

Statistical Highlights Chennai Dismantle Delhi

சென்னை: இவரை போய் ஏன் டோணி தொடர்ந்து ஆட விடுகிறார் என்று ரசிகர்கள் எல்லாம் கடுப்போடு இருக்க, நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் தனக்கு கிடைத்து வந்த அவப் பெயரையெல்லாம் தனது அதி வேக சதத்தின் மூலம் ஒரே நாளில் துடைத்து மீண்டும் ஹீரோவாகி விட்டார் சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முரளி விஜய் அதிவேகமாக சமதடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி பற்றிய துளிகள்..

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை நேற்று சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோல்வியை சந்தித்தது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் நேற்றைய போட்டியின் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 300 ரன்களை எட்டிய 3வது வீரரானார் மஹளா ஜெயவர்த்தன. அந்த அணியில் சேவாக் மற்றும் பீட்டர்சன் ஆகியோரும் 300 ரன்களை எட்டியுள்ளனர்.

- நடப்பு ஐ.பி.எல்.5வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமை சென்னை சூப்பர்கிங்ஸூக்கு நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்திருக்கிறது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கெய்லை அடுத்து முரளி விஜய்தான் சதமடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார் முரளி விஜய்.

- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் ஐ.பி.எல்.போட்டிகளில் 5-வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.

- ரோஸ் டெய்லரின் பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் சுரேய் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் 42 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.

- சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

- விஜய் நேற்று அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

- நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. மேலும் நடப்புத் தொடரில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

- ஐபிஎல் போட்டிகளில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...