Facebook Tricks

1)How to Send Free SMS via Facebook
2)How to Send Profile Pics in Facebook Chat
3)How To Download Facebook or Youtube Videos Without Any Tools
etc...

Computer Tricks

1)Computer Maintenance tips for keeping it healthy
2)Top 20 Tips To Keep Your System Faster
3)Increase your RAM by Increasing system speed
etc...

Mobile Tricks

1)15 General Tips and Tricks for Nokia Users
2)Save your Battery Charge
3)Play all file format in your mobile using core player
etc...

2012 Antivirus Softwares

1)Full Version Panda Internet Security 2012 with Serial Key
2)Download Bitdefender Total Security 2012 Beta
3)Download Avast 6 Home Edition 1 Year License Serial Key
etc...

Firefox Tricks

1)Top 10 Firefox Hacks and Tricks
2)Best Funny Firefox Tricks
3)Ultimate List Of Firefox 4 Tips; Tricks And Hacks You Should Learn Right Now
etc...

Showing posts with label Cricket News. Show all posts
Showing posts with label Cricket News. Show all posts

Friday, 25 May 2012

டெல்லி டேர்டெவில்ஸ் 86 ரன்களில் தோல்வி-பைனலில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Ipl 5 Semifinal Chennai Super Kings Vs Delhi Daredevils


சென்னை: ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் 223 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.5 ஓவர்களில் 136 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 86 ரன்களில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து அதிரடி துவக்கம் அளித்து 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுமையாக ஆடிய மைக்கேல் ஹஸ்ஸி 20 ரன்களில் ஓஜாவிடம் கேட்சாகி வெளியேறினார்.

அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னா 17 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 27 ரன்களில் பவான் நிகியின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டோணி 10 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களை எடுத்து வரூண் ஆரோன் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க துவக்க வீரர் முரளி விஜய் தொடர்ந்து அதிரடியாக ஆடி 51 பந்துகளில் சதமடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பி மார்கல் டக் அவுட்டாக, கடைசிக் கட்டத்தில் பிராவோ 12 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 33 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

கடைசி பந்தில் ரன் அவுட்டான துவக்க வீரர் முரளி விஜய் 58 பந்துகளில் 4 சிக்ஸ், 15 பவுண்டரிகள் அடித்து 113 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 222 ரன்கள் குவித்தது.

223 ரன்கள் எடுத்த வெற்றிப் பெறலாம் என்ற இமாலய ஸ்கோரை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே திணறியது. துவக்க வீரர் டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய்யிடம் கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ஷேவாக் 1 ரன் மட்டுமே எடுத்து ஹஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடி வந்த ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 24 ரன்களில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். விக்கெட்கள் ஒருபுறம் சரிய பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் ஜெயவர்த்தனே அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

ரஸல்(16), நாமன் ஓஜா(7) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய, அரைசதம் கடந்த ஜெயவர்த்தனே 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் போல்டானார். அதன்பிறகு வந்த சன்னி குப்தா(0), உமேஷ் யாதவ்(1), வரூண் ஆரேன்(0) என்று வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன.

16.5 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தகுதி போட்டியில் அபார வெற்றிப் பெற்றதன் மூலம் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் மோத சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றது.

ஆமா... மோர்கலை மிஸ் பண்ணினது தப்புதான்..: வருத்தப்படும் சேவாக்

Recipe Delhi Disaster Drop Morkel Go Home

சென்னை: நடப்பு ஐ..பி.எல். தொடரின் 2வது தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சேவாக், மோர்ன் மோர்கல் ஆடமாட்டார் என்று அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

மோர்ன் மோர்கல் மொத்தம் 25 விக்கெட்டுகளை எடுத்தவர். நடப்பு தொடரில் நல்ல பெளலர்களில் ஒருவர். அவரை வேண்டாமென சேவாக் சட்டென முடிவெடுத்திருந்தாலும் அதன் பலனை நன்றாகவே அனுபவித்துவிட்டார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மோர்கலை கைவிட்டது மட்டுமில்லாமல் பீல்டிங்கை தேர்வு செய்ததும் கூட தவறான முடிவு என்றே விமர்சிக்கப்படுகிறது. இதே தவறைத்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன்சிங்கும் செய்திருந்தார் என்கின்றனர்.

இதுபோன்ற முக்கிய போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ரன்களைக் குவித்துவிட்டு எதிரணியை சேசிங் செய்யவிட்டால்தான் சரியாக இருக்கும். ஆனால் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸை பேட்டிங் செய்யவிட்டதால் அந்த அணி தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டது.

இது பற்றி கருத்து தெரிவித்த சேவாக், இர்பான் பதானுக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. அதனால் சில மாறுதல்களை செய்தோம்.. அதனால் ரஸ்ஸெல்லை இறக்கினோம்.. மோர்கல் இல்லாதது ரொம்ப வருத்தம்தான் என்றார்.

இதேபோல் குப்தாவை பந்துவீச விட்டாலும் விட்டார் சேவாக்... இதுவரை ஒழுங்காக ஆடாத முரளி விஜய்க்கு நல்ல அடித்தளம் போட கை கொடுத்துவிட்டார். டெல்லி அணியைப் பொறுத்தவரை சேவாக், வார்னர் இருவர் தான் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள். இருவருமே சொற்ப ரன்களில் சொதப்பிவிட்டுப் போனதால் பேட்டிங்கிலும் வீழ்ந்து படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்களில் சிறு சிறு கணிப்புகள் எல்லாமே சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு கை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

அதிவேக சதமடித்து அவப்பெயரை துடைத்துக் கொண்ட முரளிவிஜய்

Statistical Highlights Chennai Dismantle Delhi

சென்னை: இவரை போய் ஏன் டோணி தொடர்ந்து ஆட விடுகிறார் என்று ரசிகர்கள் எல்லாம் கடுப்போடு இருக்க, நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் தனக்கு கிடைத்து வந்த அவப் பெயரையெல்லாம் தனது அதி வேக சதத்தின் மூலம் ஒரே நாளில் துடைத்து மீண்டும் ஹீரோவாகி விட்டார் சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முரளி விஜய் அதிவேகமாக சமதடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி பற்றிய துளிகள்..

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை நேற்று சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோல்வியை சந்தித்தது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் நேற்றைய போட்டியின் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 300 ரன்களை எட்டிய 3வது வீரரானார் மஹளா ஜெயவர்த்தன. அந்த அணியில் சேவாக் மற்றும் பீட்டர்சன் ஆகியோரும் 300 ரன்களை எட்டியுள்ளனர்.

- நடப்பு ஐ.பி.எல்.5வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமை சென்னை சூப்பர்கிங்ஸூக்கு நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்திருக்கிறது.

- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கெய்லை அடுத்து முரளி விஜய்தான் சதமடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார் முரளி விஜய்.

- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் ஐ.பி.எல்.போட்டிகளில் 5-வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.

- ரோஸ் டெய்லரின் பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் சுரேய் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் 42 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.

- சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

- விஜய் நேற்று அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

- நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. மேலும் நடப்புத் தொடரில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

- ஐபிஎல் போட்டிகளில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.

ஐ.பி.எல்.5- இறுதிப் போட்டியில் கொல்கத்தாவுடன் மோதப் போவது சென்னையா? டெல்லியா?

Ipl 5 Semifinal Chennai Super Kings Vs Delhi Daredevils

சென்னை: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் 2-வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சென்னையில் இன்று களம் இறங்குகின்றன.

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் இடம்பிடித்துவிட்டது. ஐ.பி.எல். போட்டிகளில் முதல் முறையாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்குள் இறங்கியிருக்கிறது. இருப்பினும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்ததால் கொல்கத்தாவிடம் தோற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இன்று சென்னையுடன் மோதும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஐ,பி.எல். போட்டிகளின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்புத் தொடரில் அடுத்த சுற்றுக்கே தகுதி பெறுமா? என்ற தடுமாற்றத்தில் இருந்தது. ஒருவழியாக ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றதால் இறுதிப் போடிக்கான முதல் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றியும் பெற்றுள்ளது.

வழக்கம்போல சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஏனோதானோ என அணி ஆடுமோ என்ற சந்தேகத்தை கேப்டன் டோனி கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தீர்த்து வைத்தார். தமது அபார ஆட்டத்தை முதல் முறையாக டோனி வெளிப்படுத்தியிருந்தாலும் சொதப்பல் மன்னர்கள் நிறையப் பேர் உள்ள அணியாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இருந்து வருகிறது.

ஆடுகளத்தில் ஆட்டத்தைப் பொறுத்துதான் வெற்றி தோல்வி இருக்க வேண்டுமே தவிர அதிர்ஷ்டத்தை மட்டுமே டோனி முழுமையாக நம்பி வருவது எப்போதும் அது கை கொடுத்துவிட்டாது.

உள்ளூர் மைதானம் என்பதால் சென்னைக்கு சாதகமாக இருக்கலாம். ஆனாலும் கூட ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் நன்றாக ஆடினால் மட்டுமே கோப்பையை வெல்லும் இறுதிப் போட்டிக்குள் சென்னை சூப்பர்கிங்ஸ்போக முடியும்.

சென்னையுடன் மோதும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேவாக், வார்னர் என்ற இரண்டு ஜாம்பவனாகள்தான் நம்பிக்கை நட்சத்திரங்கள். மிடிலில் ஆடக் கூடிய டெய்லர், ஜெயவர்த்தனே, ஓஜா ஆகியோரும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பர். மோர்னே மோர்கல், உமேஷ், இர்பான் ஆகியோரது பந்துவீச்சும் டெல்லிக்கு கை கொடுக்கலாம்.

சமபலம் கொண்ட டெல்லி டேர்டெவ்லிஸ் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸும் மோதுவதால் ஆட்டத்தில் அனல்பறக்கும் எனலாம்.

மூட்டையைக் கட்டி வை என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் பொல்லார்டு: பிராவோ போடும் புது குண்டு

Dhoni Was The Game Changer Harbhajan

பெங்களூர்: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் அதிர்ஷ்டவசமாக அடுத்த சுற்றில் உள்ளே நுழைந்து வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பிராவோவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு அனுப்பிய ஒரு செல்போன் மெசேஜ் இப்போது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

நேற்றைய போட்டி பற்றி கருத்து தெரிவித்த பிராவோ, 2 நாட்களுக்கு முன்பு பொல்லார்டு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில் என்னை பேக்கப் செய்து வைத்துக் கொள்.. மூட்டை முடிச்சை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போக தயராக இரு என்று அதில் கூறியிருந்தார். அதற்கு நேற்று எங்கள் பாணியில் பதில் சொல்லியிருக்கிறோம் என்றார் அவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன்சிங் கூறுகையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபாரமாக ஆடியது. ஒரு சாம்பியன் அணி எப்படி ஆடவேண்டுமோ அப்படித்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஆடியது. அதிலும் டோனிதான் ஆட்டத்தின் வெற்றியை எங்களிடமிருந்து பறித்தவர். அவர் 20 பந்துகளில் 51 ரன்களை அடித்ததுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதேபோல் நானும் வந்தவேகத்திலேயே ஆட்டமிழந்ததும் ஒரு பாதகம்தான். டோனி எப்பவுமே ஒரு போட்டியின் போக்கையே மாற்றக் கூடியவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்றார் அவர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் டோனி கூறுகையில், நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை பத்ரி மற்றும் ஹசிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பத்ரி பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதன் பிறகு நானும் பிராவோவும் நன்றாகவே விளையாடினோம் என்றார் அவர்.

கொல்கத்தாவுக்குத்தான் ஐ.பி.எல். கோப்பை: ஆறாம் அறிவை வெச்சு சொல்லும் கங்குலி

Sixth Sense Says Kkr Will Win Ipl 5 Title

கொல்கத்த: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடர்பில் படுமொக்கையாகி சொந்த அணியே தூக்கி வீசிவிட்ட புனேவாரியர்ஸ் அணியின் கேப்டன் கங்குலி இப்பொழுது ஜோசியம் பார்க்கக் கிளம்பிட்டார் போல... அதாவது ஆறாம் அறிவை வெச்சு ஆருடங்களைக் கணிக்கக் கிளம்பிட்டார்போல... ஒரு சிகசர் அடிக்கவே திணறும் இந்த தாதாவுக்கு தாத்தா காலத்து ஜோசியம்தான் லாயக்கு போல...

அவரது ஆறாம் அறிவு சொல்லுவது என்னவெனில், மே 27-ந் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல்.5வது தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என்கிறதாம்.

அதுமட்டுமின்றி கங்குலியின் ஆறாவது அறிவின் வெளிப்பாட்டுப் படி, அனேகமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியோடு இறுதிப் போட்டியில் மோதுவதை கொல்கத்தா தவிர்க்குமாம்..அதாவது சென்னை சூப்பர்கிங்ஸ் தேறாதாம்.. இந்த முறை வலுவான ஒரு நல்ல அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்ளுமாம்.

அடுத்த ஆண்டு புனேக்குத்தான் கப்

கங்குலியின் ஆறாவது அறிவு சொல்லியிருக்கும் ஒரு தத்துவத்தை நிச்சயம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கிரிக்கெட் என்பது ஒரு வட்டம் மாதிரி...இந்த முறை ஒரு அணி ஜெயிச்சா அடுத்த ஆண்டு இன்னொரு ஜெயிக்குமாம்.. அடுத்த ஆண்டு நிச்சயம் புனேவாரியர்ஸ்தான் கோப்பையைக் கைப்பற்றும் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் கங்குலி.

கொல்கத்தா அணியில் நரீன் இருக்கிறவரைதான் அந்த அணி ஜெயிக்க முடியும்..இல்லையெனில் சொதப்பல்தான் என்றும் சொல்லுகிறார்..

கிரிக்கெட் உலகத்திலிருந்து விடைபெற்று விட்டாலும் "ஆறாம் அறிவு" ஆரூடகர்த்தா கங்குலிக்கு நல்ல தொழில் கைவசம் இருக்கிறது போல..

இன்னமும் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவே நம்புகிறோம்: சேவாக்

Sehwag Confident Delhi S Comeback In Ipl 5

புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஐ.பி.எல்.5வது தொடரில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி டேர்ட்வெஇல்ஸ் இழந்துவிட்டது. இருப்பினும் இரண்டாவது குவாலிபையரில் விளையாடும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்றே நம்புவதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டிலிருந்து தற்போதுதான் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆனால் அது நடக்காமல் போனது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள சேவாக், எங்கள் அணி சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 160 ரன்கள் என்பது சேஸிங் செய்யக் கூடியதுதான். தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததாலும் கடைசி சில ஓவர்களை சரியாக விளையாடாததாலுமே தோற்க நேரிட்டது. என்னைப் பொறுத்தவரையில் வருண் ஆரோன் மற்றும் உமேஷ் யாதவ் நன்றாக பந்து வீசினர் என்றார்.

இருப்பினும் தற்போதும் கூட எங்களுக்கு நம்பிக்கை குறைந்துபோய்விடவில்லை. நாங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்பவிலை. நடப்பு தொடரின் இரண்டாவது குவாலிபையரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறோம் என்றார் சேவாக்.



எனக்குத்தான் வயசாகலையே, அடுத்த ஐபிஎல் தொடரிலும் ஆடலாம்- கங்குலி

Not 40 Yet Will Decide Play Ipl 6 Ganguly

கொல்கத்தா: எனக்கு 40 வயது கூட ஆகவில்லை. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட கூட நான் தயாராக உள்ளேன் என்று புனே வாரியர்ஸ் இந்தியா அணியின் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் முதல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அறிமுகமானவர் செளரவ் கங்குலி. முன்னாள் இந்திய கேப்டனான இவர், சொதப்பலான ஆட்டம் காரணமாக அதன்பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காமல், புனே வாரியர்ஸ் அணிக்கு தாவினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் உடல்நிலை குறைவு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் 5 தொடரின் துவக்கத்தில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வந்த புனே வாரியர்ஸ் அணி, கடைசியில் தொடர் தோல்விகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குப் போய் விட்டது.

ஐபிஎல் 5 தொடரில் புனே வாரியர்ஸ் லீக் போட்டிகளுடன் வெளியேறிய நிலையில், கங்குலிக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் மீதான அதிருப்தி காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் பரவியது.

இந்த நிலையில் ஐபிஎல் 6வது தொடரில் விளையாட கூட தான் தயாராக இருப்பதாக, செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 6வது தொடரின் போது நான் 40 வயது கூட கடந்திருக்கமாட்டேன். எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். நானும் ஒரு மனிதன் என்பதால் எனக்கும் தோல்விகள் ஏற்படுவது சகஜம். எனவே எனது தோல்விகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல அணியின் கேப்டன்களும் தோல்வியை சந்தித்து உள்ளனர்.

அணியில் உள்ள 23 அல்லது 24 வயதுள்ள இளம் வீரர்களை போல என்னால் செயல்பட முடியாது என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய எனது உடல்திறன் எனக்கு திருப்தி அளிக்கிறது.

ஐபிஎல் 5 தொடரை பொறுத்த வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பிர் சிறப்பாக செயல்படுகிறார். எனவே இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றார்.

சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளை பயன்படுத்த தடையில்லை

சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளை பயன்படுத்த தடையில்லை

சென்னை:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பார்வையாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பயன்படுத்துவதற்கு, ஒரு வார காலத்துக்கு தடையில்லை. இதற்கான உத்தரவை, சென்னை ஐகோர்ட் நேற்று பிறப்பித்தது.சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக, மூன்று கேலரிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 13 ஆயிரம் பேர் அமரலாம். கேலரி கட்டுவதற்கான அனுமதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில், கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட போது, இந்த மூன்று கேலரிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.ஐ.பி.எல்., அரையிறுதி போட்டி இன்றும், இறுதிப் போட்டி 27ம் தேதியும் சென்னையில் நடக்க உள்ளது. இதையடுத்து, திட்ட அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், மூன்று கேலரிகளையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் இதில் குறுக்கிட சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மனுத் தாக்கல் செய்தது.சி.எம்.டி.ஏ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மூன்று கேலரிகளும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. அந்த கேலரிகள் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. கேலரிகளை பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ.,விடம் இருந்து திட்ட அனுமதிக்கான ஒப்புதலும், சென்னை மாநகராட்சியிடம் இருந்து கட்டட அனுமதியும் கிடைக்கும் வரை, மனுதாரர் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன், மதிவாணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மூன்று கேலரிகளையும் பயன்படுத்துவதில், சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி குறுக்கிட ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வரும் 25, 27ம் தேதிகளில் போட்டி நடக்க உள்ளதால், மூன்று கேலரிகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து, சென்னை மாநகராட்சிக்கு மனுதாரர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தேவையான வரியையும் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு, இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும். விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

வெற்றிக்கு உதவிய பத்ரிநாத்-ஹசி * பிளமிங் பாராட்டு

வெற்றிக்கு உதவிய பத்ரிநாத்-ஹசி * பிளமிங் பாராட்டு

பெங்களூரு:மும்பை அணிக்கு எதிராக பத்ரிநாத்-மைக்கேல் ஹசி ஜோடியின் பொறுப்பான ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது, என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பிளே-ஆப் சுற்றின் இரண்டாவது போட்டியில், சென்னை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. சென்னை அணி ஒரு கட்டத்தில் 1.2 ஓவரில் ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில் இணைந்த பத்ரிநாத் (47), மைக்கேல் ஹசி (49) ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இதனால் பின்வரிசையில் களமிறங்கிய கேப்டன் தோனி (51), டுவைன் பிராவோ (33) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 187 ரன்கள் பெற்றுத் தந்தனர்.இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறியது: மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்று, பைனலுக்கான பந்தயத்தில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியின் வெற்றிக்கு பத்ரிநாத், மைக்கேல் ஹசி அமைத்த கூட்டணி முக்கிய காரணம். இல்லையென்றால், சென்னை அணி 160 ரன்களுக்கும் குறைவாக தான் ரன் எடுத்திருக்க முடியும். இதனை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் எளிதாக சேஸ் செய்திருப்பார்கள். இந்த ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்க உதவியது மட்டுமல்லாமல், தோனி மற்றும் பிராவோவின் அதிரடி ஆட்டத்திற்கும் வழிவகுத்தது. இதனால் 187 ரன்கள் என்ற இமாலய இலக்கை பதிவு செய்து, மும்பை அணிக்கு மனதளவில் நெருக்கடி கொடுக்க முடிந்தது.தற்போது எங்கள் கவனம் முழுவதும் டில்லி அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள முக்கியமான போட்டியின் மீது உள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேற முயற்சிப்போம். மும்பை அணிக்கு எதிராக விளையாடியது போல, இன்றும் விளையாடுவது எளிதான காரியமல்ல. இருப்பினும் முழுத்திறமையை வெளிப்படுத்தி போராடுவோம்.இவ்வாறு ஸ்டீவன் பிளமிங் கூறினார்.


Wednesday, 7 March 2012

டுவென்டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா செல்கிறது இந்திய அணி- சச்சின் ஆடுவது சந்தேகம்!

Kallis


ஜேகனஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தோல்வியுடன் திரும்பிய இந்திய அணி வரும் 11ம் தேதி முதல் பங்காளதேஷில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. ஆசியக் கோப்பை வரும் 22ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதன்பிறகு அடுத்த மாதம் (ஏப்ரல்) 2ம் தேதி முதல் 5வது ஐபிஎல் தொடர் துவங்குகின்றது.

அதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 27ம் தேதியுடன் முடிவடைகின்றது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே டுவென்டி20 போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் ஏற்றது போல வரும் 30ம் தேதி ஜோகன்ஸ்பார்க்கில் இப்போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் அளித்துள்ளது.

இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் காலீஸை கெளரவிக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் கூறியதாவது, கிரிக்கெட்டில் எனது கனவை நிறைவேற்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் எனக்கு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது. இதனை மகிழ்ச்சி உடன் வரவேற்கின்றேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எனது தந்தை குறைந்த வயதிலேயே இறந்தார். அதேபோல இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

வரும் 30ம் தேதி நடைபெற போட்டியில் கலந்து கொள்ள வரும் 28ம் தேதி இந்திய அணியினர் ஜோகனஸ்பார்க் செல்ல உள்ளனர். இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் சச்சினுக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

துணை கேப்டனாக பதவி கிடைக்காத கம்பிர் போன்ற மூத்த வீரர்கள் கவலைப்பட கூடாது - ராகுல் டிராவிட்

Dravid and Kholi


மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம்வீரர் விராத் கோஹ்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால், கெளதம் கம்பிர் போன்ற மூத்த வீரர்கள் வருத்தப்பட கூடாது என்று முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வரும் 11ம் தேதி துவங்க உள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக டெல்லி வீரர் விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.

இந்திய அணியில் இளம்வீரர் விராத் கோஹ்லி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது, மூத்த வீரர்களுக்கு வருத்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கெளதம் கம்பிர் போன்ற அணியின் மூத்த வீரர்கள், துணை கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்து வருத்தப்பட கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடினார். அதற்காக இந்திய அணி தேர்வுக் குழுவினர் அவருக்கு சிறிய அளவிலான மதிப்பை வழங்கி உள்ளனர்.

விராத் கோஹ்லி தனது விளையாட்டு திறமையை முதல் முறையாக நிரூபித்து காட்டியுள்ளார். ஆனால் அவர் இன்னும் பல படிகளை கடக்க வேண்டியுள்ளது. துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாரும் அடுத்தப்படியாக கேப்டனாக நியமிக்கப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

இதனை கண்டு கம்பிர் போன்ற மூத்த வீரர்கள், தாங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நினைக்க கூடாது. தற்போது கேப்டன் டோணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அது போன்ற எண்ணம் கொள்ள தேவையில்லை என்றார்.

முத்தரப்பு தொடரின் கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியா, இலங்கை இடையே நாளை மோதல்

Watson and Jayawardene

அடிலெய்ட்: முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3வது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா,இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன. சம பலம் கொண்ட இரு அணிகளும் மோத உள்ளதால், நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி போட்டி (3வது இறுதிப் போட்டி) நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் 3வது முறையாக மோத உள்ளன. கடந்த 2 இறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், நாளை வெற்றிப் பெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.

ஆஸ்திரேலியா அணி:

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இடது தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ஜார்ஜ் பலே, நாதன் லயிட் ஆகியோர் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். மைக்கேல் கிளார்க்குக்கு பதிலாக ஷான் வாட்சன் கேப்டனாக செயல்படுவார். கிளார்க்குக்கு பதிலாக பேட்ஸ்மேன் பீட்டர் பாரஸ்ட்டை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கடந்த 2 இறுதிப் போட்டிகளில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதனால் பேட்ஸ்மேன்களை நம்பியே ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. இத்தொடரில் டேவிட் வார்னர் 2 சதங்களை அடித்துள்ளார். அவருடன் ஹஸ்ஸி சகோதரர்களும் மற்ற வீரர்களும் அதிரடியில் மிரட்டினால் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றலாம்.

இலங்கை அணி:

இலங்கை அணியில் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 பிரிவும் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இத்தொடரில் 2 சதங்களை அடித்துள்ள தில்ஷன் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். அவருடன் கேப்டன் ஜெயவர்த்தனே, சந்திமால், சங்கக்காரா ஆகியோரும் இணைந்தால் அணி எளிதாக இமாலய ஸ்கோரை எட்டிவிடலாம்.

ஆல்-ரவுண்டர் ஆஞ்சிலோ மேத்யூஸ் நாளை ஆடுவரா என்ற சந்தேகம் நீடிக்கின்றது. பந்துவீச்சில் மலிங்கா சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் உள்ள தொய்வு, கேப்டன் கிளார்க்குக்கு ஓய்வு ஆகியவை இலங்கைக்கு சாதகமாக உள்ளது.

இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்பிற்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்ஆப்பிரிக்காவில் டுவென்டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு - சச்சினுக்கு ஓய்வு

Sachin


டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் டுவென்டி20 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர் சச்சினுக்கு பதிலாக அதிரடி வீரர் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க்கில் நடைபெற உள்ள இப்போட்டிக்கான இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கர்நாடகா பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் விராத் கோஹ்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் டுவென்டி20 போட்டியிலும் அதே பதவியை வகிப்பார். கேப்டனாக வழக்கம் போல டோணி செயல்படுவார்.

வரும் 30ம் தேதி நடைபெற போட்டியில் கலந்து கொள்ள வரும் 28ம் தேதி இந்திய அணியினர் ஜோகனஸ்பார்க் புறப்பட்டு செல்ல உள்ளனர்.

இந்திய அணியின் விபரம்:

டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி (துணை கேப்டன்), ராபின் உத்தப்பா, கெளதம் கம்பிர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசப் பதான், இர்பான் பதான், மனோஜ் திவாரி, அசோக் தின்டா.

ஐபிஎல் 5வது சீசன்: ராஜஸ்தானுக்கு புதிய சீருடை, டெல்லிக்கு புதிய பாட்டு அறிமுகம்

Royals unveiled team's new jersey


மும்பை: 5வது ஐபிஎல் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி டேர்டேவில்ஸ் அணியினர் புதிய தீம் பாடலை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஐபிஎல் டுவென்டி20 கிரிகெட் தொடரின் 5வது சீசன் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4ம் தேதி சென்னையில் துவங்குகின்றது. சென்னை, மும்பை, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் சீருடை புது பொலிவு பெற்றுள்ளது. பழைய நீல நிற சீருடை மாற்றப்பட்டு, இந்த ஆண்டு பழுப்பு நிறத்தலான சீருடை அளிக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்களின் டி-சர்ட்டில் ராஜஸ்தான் அணியின் விளம்பர நிறுவனமான அல்டரா டெக் நிறுவனத்தின் சின்னம் (லோகோ) அச்சிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியின் புதிய சீருடை அறிமுக விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்களான நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்தரா, அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை ஷில்பா ஷெட்டி அணியின் புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு அவர் கூறியதாவது,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பரதாரராக அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. விளம்பரதாரர் மற்றும் புதிய கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து செயல்பட்டு அணிக்கு புதுமையை அளித்தனர். அதன்மூலம் அணியின் ரசிகர்களை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகிழ்விக்க முடியும் என்று நம்புகின்றேன் என்றார்.

டெல்லிக்கு புதிய பாட்டு:

அதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் புதிய அணி பாடல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் 'முண்தே டில்லி கே' என்ற அணி பாடல் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாடலை மிச்சு பட்டேல், அர்ஜித் தத்தா ஆகியோர் இயற்றி உள்ளனர். பாடலை ஜஸ்பிரித் ஜாஸ் பாடியுள்ளார்.
  Read:  In English 
இப்பாடலை குறித்து டெல்லி அணியின் உரிமையாளரான ஜி.எம்.ஸ்டோர்ட்ஸ் நிறுவன தலைவர் (விற்பனை பிரிவு) ஹிமந்த் துவா கூறியதாவது,

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரசிகர்களை திரட்டி, அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சக்தி, இப்பாடலுக்கு உள்ளது என்றார்.

டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாட்டும் மாறுமா அல்லது அதே விசில் போடுதானா என்பது தெரியவில்லை...

ஆசியக் கோப்பை: கேப்டன், துணை கேப்டன் இல்லாத வங்கதேச அணி அறிவிப்பு

India Vs Bangaladesh


டாக்கா: ஆசியக் கோப்பையில் விளையாட உள்ள வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன், துணை கேப்டன் உள்ளிட்டோர் யார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் 11ம் தேதி முதல் துவங்குகின்றது. டாக்காவில் நடைபெற உள்ள இத்தொடரில் விளையாட உள்ள இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன், துணைக் கேப்டன் யார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அதேபோல வங்கதேசம் அணியின் அதிரடி வீரரான தம்மீம் இக்பால் ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை.

வங்கதேசம் வரும் 11ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், 16ம் தேதி இந்தியாவுக்கு எதிராகவும் விளையாட உள்ளது. ஆசியக் கோப்பைக்கான அனைத்து போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நடைபெற உள்ளது.
  Read:  In English 
15 பேர் அடங்கிய வங்கதேசம் அணி:

அப்துர் ரஸாக், அனாமுல் ஹக், எலியாஸ் சன்னி, இம்ருல் கையேஸ், ஜஹ்ருல் இஸ்லாம், மஹ்மத்துல்லா, மஷ்ரபி மொர்டாசா, முஸ்பிகுர் ரஹீம், நசீர் ஹொசைன், நஸிமுதின், நஸ்முல் ஹொசைன், ஷகாதத் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம்.

கடந்த ஆண்டு (2011) டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் அணியை முஷ்பிகுர் ரஹ்மான் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Related Posts Plugin for WordPress, Blogger...